இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஹரீஸ் எனது பக்கத்து வீட்டிலிருக்கும் எனது இளமைக்கால நண்பரின் மகன்.
எப்படி இவ்வாறு நேர்ந்தது என்பதை யோசிக்கும் போது துயரம் கலந்த ஆச்சரியம் ஏற்படுகிறது.
இந்த இளம் வயதில் இதுபோன்ற கொடுமையான இழப்பை என் நண்பனின் குடும்பம் எவ்வாறு தாங்கிக்கொள்வார்கள் என தெரியவில்லை.
ஹரீஸின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
Tuesday, August 19, 2008
கொடுமையான மரணம்
Posted by மஞ்சூர் ராசா at 2:04 AM 14 comments
Monday, August 18, 2008
முசரஃப் பதவி விலகியது சரியா?
இதோ அதோ என்று ஒரு வழியாக பாகிஸ்தான் அதிபர் முசரஃப் பதவி விலகிவிட்டார்.
இது ஒரு விதத்தில் நல்லது என்று எடுத்துக்கொண்டாலும் தற்போது ஆட்சியிலிருப்பவர்களின் ஊழலை கணக்கெடுக்கும்போது பாகிஸ்தானின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
அமெரிக்காவின் நிலையில் எந்த பெரிய மாற்றமும் இருக்கும் என்று தெரியவில்லை. தற்போதைய அரசும் அமெரிக்காவை சார்ந்தே இருக்கும்.
இந்தியாவிற்கு மேலும் அதிக தலைவலி வரும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. பேனசீரின் கணவரும், நவாஸ் செரீப்பும் விரைவில் முட்டிக்கொள்வார்கள் என்பதும் அரசல் புரசலாக தெரிகிறது.
மொத்தத்தில் தீவிரவாதிகள், தலிபான்களின் கை இனி ஓங்கும் என்றே தெரிகிறது.
இந்தியா இன்னும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
Posted by மஞ்சூர் ராசா at 6:49 AM 2 comments