Thursday, May 06, 2010

தமிழ் சினிமா - ஒரு பார்வை


நம்மில் பலருக்கு சினிமா உலகம் என்றாலே ஒரு சொர்க்கப்புரி என்ற நினைப்புமட்டுமல்லாது, நடிக, நடிகையர்கள் கடவுள்களாகவும், ஆதர்ஷ புருசர்களாகவும் இன்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடப்படுகின்றனர். ஏன் தமிழ் நாட்டு அரசியலே திரைப்பட துறையை சேர்ந்தவர்களாலெயே ஆட்டுவிக்கப்பட்டு வந்துள்ளது.

தியாகராஜர் காலம் முதல் இன்றைய சிம்பு காலம் வரை சினிமா உலகம் ஒரு மாய உலகமாகவே பலருக்கு தோன்றுகிறது. ஆனால் உண்மை நிலையென்ன என பலருக்கும் தெரியவில்லை.

பல திறமையான இயக்குனர்கள் ஒரு படம் அல்லது இரண்டு படங்களுக்கு மேல் காணாமல் போய்விடுகின்றனர்... அதற்கு காரணம் அவர்களின் திறமையின்மையா என்றால் அது கிடையாது.... சினிமா உலகம் கந்து வட்டிக்காரர்களாலும், பண முதலைகளாலும், அண்டர்வோர்ல்ட் ஆட்களினாலும் ஆளப்பட்டு வருவதே. தயாரிப்பாளர்கள் இவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் பல காரணங்களால் படம் சரியாக எடுக்க முடியாமலும், எடுத்தும் தோல்வியில் முடிவதாலும் தங்கள் வாழ்க்கையையே இழந்துவிடுகின்றனர்.

கேடி குஞ்சுமோன், ஜி. வெங்கடேஸ்வரன், ஏ எம் ரத்னம் போன்ற பிரம்மாண்டமான படம் எடுத்தவர்களின் இன்றைய நிலை மிக பரிதாபம். இதில் ஜிவி மனம் நொந்தே இறந்துவிட்டார்.

அது போல பல இயக்குனர்களையும் நடிகர்களையும் அறிமுகம் செய்து பல வெற்றிப் படங்களை தயாரித்த ஆர்பி செளத்ரியின் இன்றைய நிலை என்ன என்பது கேள்விக்குறி.

பல நடிக நடிகைகள், இயக்குனர்கள் எல்லாம் ஒரு படம் கொஞ்சம் ஓடினாலே போதும் ஆடும் ஆட்டமும் செய்யும் ஜம்பங்களும் மிக மிக அதிகம். இதில் இயக்குனரே நடிகராக மாறி நம்மை சாகடிப்பதை என்னவென்று சொல்ல. இதற்கு பலரை உதாரணமாக சொல்லலாம். இரண்டு படங்கள் ஊத்திகிட்ட பிறகு இவர்களை சீண்டுவார் யாரும் இல்லை என்பதை மறந்து விடுகின்றனர்.

ஒரு சிலரை தவிர இது திரைப்படத்துறையில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

நடிக நடிகைகளையே எடுத்துக்கொண்டாலும் பலர் ஓரளவுக்கு காசு வந்தவுடன் சொந்த படம் எடுக்கிறேன் என ஆரம்பித்து அது தோல்வியில் முடிந்து பணமும் போய் பின் பட வாய்ப்புகளும் போய் ஒடுங்கி விடுகின்றனர். சிலர் எந்த வேடம் கிடைத்தாலும் நடிக்க தயாராகி விடுகின்றனர். உதாரணம்: ரம்பா, லக்சுமி, பானுப்ரியா, ரோஜா, தேவயானி இன்னும் பலர்.

சிலர் தங்கள் மகன்/மகள் போன்றோரை நடிகராக்க ஆசைப்பட்டு சொந்த படம் எடுத்து கையை சுட்டுக்கொள்கின்றனர்: பாரதிராஜா, ரவிச்சந்திரன், பாக்கியராஜ், தியாகராஜன் இன்னும் பலர்.

சில பிரபல நடிகர்கள் மார்க்கெட் டல்லாக இருக்கும் போது சொந்தப்படம் எடுத்து அதுவும் தோல்வியில் முடிந்து விலாசம் இல்லாமலே போய்விடுகின்றனர்: மோகன், இன்னும் சிலர்

ஏவிஎம், சிவாஜி பிலிம்ஸ் போன்றவர்களே கையை சுட்டு பின் ரஜினி யின் உதவியால் கொஞ்சம் தங்கள் நஸ்டத்தை ஈடு செய்தவர்களே.

கமலின் எத்தனை படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை ஈட்டிக்கொடுத்திருக்கிறது என்பது பெரும் கேள்விக்குறி!

விஜய்யின் தொடர்ந்த தோல்விப்படங்கள் மூலம் அவர் இன்று விலாசம் இல்லாமல் போயிருப்பார். சன் ஊடகம் மூலம் இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறார்.

அஜீத்தில் அசல், கிரீடம், நடுவில் வந்த இருபடங்களும் தோல்விப்படங்களே.

விக்ரம் தொடர்ந்து மூன்றோ நாலோ தோல்விபடங்களை கொடுத்துவிட்டார்.

சூர்யாவின் வாரணம் ஆயிரம் பெரிய லாபத்தை கொடுக்கவில்லை என்பதே உண்மை அது போல சமீபத்தில் வந்த இரு படங்கள்.

மேலும் சமீபத்தில் வந்த பல படங்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. மேலும் பல படங்கள் ஒரு சில காட்சிகள் தயாரிக்கப்பட்டும், பாதி முடிந்த நிலையிலும் சில இறுதி பகுதிகள் முடியாத நிலையிலும் சில ரிலீஸ் செய்ய முடியாத நிலையிலும் அக்காலம் முதல் இக்காலம் வரை தொடர்ந்து இருந்து வருகின்றன. இவற்றினால் ஏற்படும் நஸ்டம் மிக மிக அதிகம். அது படத்தை தயாரிப்பவரையே சாரும். கந்து வட்டிக்கு வாங்கி தயாரிக்கும் இது போன்ற படங்கள் மூலம் எத்தனையோ தயாரிப்பாளர்கள் இன்று சோற்றுக்கே வழியில்லாமல் நாதியற்று போயிருக்கின்றனர் என்பது தான் கசக்கும் உண்மை.

மிகவும் குறைந்த எண்ணிக்கையிலுள்ளவர்களே சினிமா மூலம் சம்பாதிக்கும் பணத்தை உருப்படியான வழியில் முதலீடு செய்கின்றனர். சிலர் தங்கள் வாரிசுகள் சரியில்லாமல் போவதால் பெரும் நஸ்டமும் அவமானமும் அடைகின்றனர். இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

அடுத்து திடீரென பணம், புகழ் என வருவதால் தலைகால் புரியாமல் ஆடி எல்லா தீயப்பழக்கங்களுக்கும் ஆளாகி அழிபவர்கள் ஒரு புறம். இதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன. இதில் குடித்தே செத்தவர்கள் மிக அதிகம். சுருளிராஜன், விஜயன் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

நடிகைகள் என்றால் புகழ், பணம் என்ற போதையில் செய்வதறியாமல் பல தவறுகள் செய்து வழிகாட்டிகள் இல்லாமல் தற்கொலைகளில் தங்கள் வாழ்க்கையை முடித்துவிடுகின்றனர்.

திருமணம் செய்யும் பல நடிகைகள் விவாகரத்து செய்வதற்கு முக்கிய காரணமே அவர்களின் கடந்த கால வாழ்க்கையும், நிஜ வாழ்க்கையுடன் அவர்களால் சமாளித்துக்கொண்டு போக முடியாமையுமே!. இதில் மிகவும் பெரிய ஜோக் காதல் கல்யாணம் செய்பவர்கள் பின் விவாகரத்து செய்வது (பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபுதேவா etc.). அதனாலெயே சில புத்திசாலி நடிகைகள் இரண்டாம் அல்லது மூன்றாம் திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுகின்றனர். (ஹேமா மாலினி, ஸ்ரீதேவி, ராதிகா)

மேலும் பலர் எவ்வளவோ திறமை இருந்தும் கடைசி வரை வெளியில் தெரியாமலே வாய்ப்புகள் கிடைக்காமலே மங்கி போய்விடுகின்றனர்.நல்லவர்கள் இருக்கின்றனர் என்றாலும் ஏமாற்றுக்காரர்களும் ஏய்ப்பவர்களும் மிக அதிகமாக இருக்கின்றனர் என்பதே உண்மை.

சினிமா உலகம் வெளிப்பார்வைக்கு வேண்டுமானால் கவர்ச்சியாக தோன்றலாம்.. ஆனால் உள்ளே மிகவும் நாறிப்போய் கிடக்கிறது என்பதே சோகமான உண்மை.

Wednesday, March 17, 2010

காபி வித் கவுண்டமணி


பதினாறு வயதினிலே படத்தில் நடித்ததன் மூலம் ஓரளவு பிரபலாமாகியிருந்த கவுண்டமணியை நான் அடிக்கடி எல்டாம்ஸ் சாலை பேருந்து நிறுத்தத்திலோ அல்லது எல்டாம்ஸ் ஹோட்டல் முன்பாகவோ நின்றுக்கொண்டிருப்பதை பார்ப்பேன். ஹோட்டலுக்கு எதிர்புறமுள்ள கடையின் மாடியில் நான் நண்பர்களோடு தங்கியிருந்தேன். ஒரு அறையில் திரைத்துறையை சேர்ந்த சில நண்பர்கள் தங்கியிருந்தனர். அங்கு அடிக்கடி ஜனகராஜ் வருவார். அவரும் அப்போது படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அவர் வந்தால் மிகவும் கலகலப்பாக இருக்கும் எங்கள் அறை.

ஒரு நாள் எல்லோரும் காபி சாப்பிடலாமெனெ எல்டாம்ஸ் ஹோட்டலுக்கு போனோம். நடிகர் சந்திரசேகரும் அங்கு நின்றிருந்தார். ஹோட்டலினுள் போகும் நேரத்தில் கவுண்டமணியும் எங்களுடன் இணைந்துக்கொண்டார். சில நிமிடங்கள் காப்பி சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம்.நான் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். புது வாய்ப்புகள் பற்றியும், நடிப்பது பற்றியுமான பேச்சுகள். காப்பி குடித்து முடித்ததும் காப்பிக்கான கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பின்னர் பல முறை அதே ஹோட்டல் வாசலில் அவரை பார்ப்பேன். ஆனால் பேசியதில்லை.

ஒரு சிறந்த காமெடியன் என சொல்வதைவிட குணச்சித்திர நடிகர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

சிம்புவுடன் கடைசியாக நடித்த ஒரு படத்திற்கு பிறகு அதிக படங்கள் இல்லாமல் இருந்தார். உடல் நலப்பிரச்சினையும் காரணம் என நினைக்கிறேன். சமீபத்தில் திரையுலகினர் நடத்திய ஒரு விழாவில் சத்யராஜுடன் மேடையில் ஏறி சில நிமிடங்கள் பேசினார்.

இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் எனவும் கேள்விப்பட்டேன்.

இரண்டு தினங்களுக்கு முன் கழுத்துவலியால் அவதிப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி. தற்போது நலமுடன் இருப்பதை அறிந்து ஆறுதல்.

Sunday, February 22, 2009

ஸ்மைல் பிங்கி என்னும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறும்படத்துக்கும் ஆஸ்கர் விருது


ஸ்லம்டாக் மில்லியனருக்கு எட்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருக்கின்றன. அதில் ஏஆர் ரகுமானுக்கு இரண்டு, குல்ஜாருக்கு ஒன்று, பூக்குட்டிக்கு ஒன்று.


இதைத் தவிர சிறந்த குறும்படத்துக்கான விருதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மைல் பிங்கி படத்திற்கு கிடைத்திருக்கிறது. வாழ்த்துவோம்.




SMILE PINKI
Megan Mylan
ACADEMY AWARDS HISTORY
This is the first Academy Award nomination for Megan Mylan.

FILM SYNOPSIS
Pinki, a girl in rural India whose cleft lip has made her a social outcast, has a chance for a new life when she meets a dedicated social worker.

SMILE PINKI
Megan Mylan
ACCEPTANCE SPEECH
Wow! Oh, to be in a room with all this talent. Lucky me, and to tell stories for a living, lucky me. And to have a family and friends who love me and my movies totally unconditionally. Documentary, like all filmmaking, is a complete team sport, and I'd like to thank my editor Purcell Carson, cinematographers Nick Doob and Jon Shenk, field producer Nandini Rajwade and from HBO Sheila Nevins and Lisa Heller. The same magic that happens in our film happens every day for children with clefts all around the world because of a terrific organization called the Smile Train. But most importantly for documentary filmmakers it's our subjects. The incredible Dr. Subodh and his team, Ghutaru Chauhan and our heroine Pinki Kumari. Thank you, thank you, thank you for letting me tell your inspiring story. What a gift. Thank you all so much.
ACADEMY AWARDS HISTORY
This is the first Academy Award nomination for Megan Mylan.

SMILE PINKI



மாதவராஜ் சமீபத்தில் இந்தப் படத்தைப் பற்றி எழுதிய பதிவு கீழே:
http://mathavaraj.blogspot.com/2009/02/blog-post_17.html

ஸ்லம் டாக் மில்லியனரில் கரைந்து போன ஸ்மைல் பிங்கி
எட்டு வயது சிறுமி பிங்கியின் உதடுகளில் இப்போது பூத்திருக்கும் புன்னகையை லாஸ் ஏஞ்செல்ஸில், ஆஸ்கருக்கான திரையில் உலகம் காணப் போகிறது. பிறந்தவுடன் இவள் முகத்தைக் காண சகிக்காமல், முகத்தைத் திருப்பிக்கொண்ட இவளது தாய் ஷிம்லாதேவி இப்போது மகளையே பார்த்துக் கொண்டு இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில், மிர்சாபூர் மாவட்டத்தில் ரம்பூர்தபாஹி கிராமத்தில் இன்று இவள்தான் தேவதை. சிலகாலம் முன்பு வரை 'கிழிந்த உதட்டுக்காரி' என்று கிண்டல் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று நேசத்துடன் பிங்கி என்று அழைக்கிறார்கள். சகக் குழந்தை ஒன்று இவளைக் கட்டி அணைத்துக் கொள்கிறது.

யாருடனும் விளையாட முடியாமல், இயல்பாக பேச முடியாமல், பழக முடியாமல் போன பழைய நினைவுகள் எல்லாம் இப்போது ஆறியிருக்கலாம். ஆனால் அந்தக் காலம் கொடுமையானவை. பிறக்கும் போதே உதட்டில் இருந்த அந்த சிறு பிளவு இவளை மற்றவர்களிடமிருந்து தொலைதூரத்துக்கு விரட்டியிருந்தது. கண்ணாடியில் தன்னைப் பார்த்து வெதும்பும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகம் வாடிப் போகிறது. ஒருச் சின்னத் துண்டு நிலத்தில் எதோ வயிற்றுக்கும் வாய்க்குமாக ஐந்து குழந்தைகளோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இவளது தந்தை ராஜேந்திர சோங்கர் "இவள் செத்துப் போயிருக்கலாம்" என்று பலநேரங்களில் நினைத்ததுண்டு. முகத்தையே கோரமாக காண்பிக்கும் அந்த உதடுகளை சரி செய்யும் ஞானமும், பணமும் அவருக்கு இல்லை.

39 நிமிடங்கள் ஓடும் "ஸ்மைல் பிங்கி" எனும் இந்த ஆவணப்படம், பிங்கியின் முகத்தில் இருந்த துயரம் களையப்பட்டு புன்னகை பிறந்த கதையைச் சொல்கிறது. பங்கஜ் என்னும் சமூக சேவையாளர் ஒருவர், மக்களிடம் இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அது சரி செய்ய முடியும் என நம்பிக்கையளித்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை சந்தித்து விளக்குகிறார். அப்படி அவர் காணும் குழந்தைகளில் பிங்கியும் ஒருத்தியாக இருக்கிறாள். ஸ்மைல் டிரெயின் என்னும் அமைப்பின் மூலம் இலவசமாக இந்த ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. 45 நிமிடங்கள் நடக்கும் ஆபரேஷனுக்குப் பிறகு பிங்கியிடம் கண்ணாடி கொடுக்கப்படுகிறது. ஆபரேஷன் நடந்த வலியையும் மீறி பிங்கி சிரிக்கிறாள்.

ஒவ்வொரு வருடமும் 35000 குழந்தைகள் இந்தியாவில் இப்படி கிழிந்த உதடுகளோடு பிறப்பதையும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் பரிதாபத்திற்குரியவர்களாய் வாழ்வதையும் குறிப்பிடுகிறது இந்த ஆவணப்படம். பல மேலை நாடுகளில், இப்படிப்பட்ட குறையொன்று இருப்பதே தெரியாதாம். அப்படி பிறந்த குழந்தைகளுக்கு அடுத்த நான்காவது நிமிடமே அறுவை சிகிச்சை எளிதாக நடந்து விடுமாம்! பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் படம் ஜன்னலைத் திறந்து வைப்பதாய் இருந்தால் போதும் என்கிறார் இப்படத்தை இயக்கிய, பிரேசில் நாட்டுக்காரரான மேஹன் மைலன்.

லாஸ் ஏஞ்செல்ஸுக்கு பிங்கி அவளது தந்தையோடும், அவளை ஆபரேஷன் செய்த டாக்டரோடும் செல்ல இருக்கிறாள். பாஸ்போர்ட், விசா ஏற்பாடு செய்தாகி விட்டது. அந்த நிலமே அதிரும்படியாய் எப்போதாவது மேலே செல்லும் விமானத்தை அதிசயமாகப் பார்த்த அந்த சிறுமி, இன்னும் ஓரிரு நாட்களில், அதில் பயணம் செய்ய இருக்கிறாள். நிருபர் ஒருவர் பிங்கியிடம் கேட்கிறார். "ஆஸ்கர் என்றால் என்ன?". பதில் வருகிறது, "தெரியாது"

இதற்கு முன்னர் உலகத்தரத்துக்கு இந்தியாவில் உருவாக்கப்பட்ட படங்களை, நாட்டின் ஏழ்மையை சித்தரிப்பதாகவே இருக்கின்றன என்று விமர்சனம் செய்து ஒதுக்கியது நடந்தது. சத்யஜித்ரேவும் இப்படிப்பட்ட கருத்துக்கு ஆளானார். இன்று ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து தேர்வு செய்திருக்கும் படங்கள் இரண்டு குறித்தும் அப்படிப்பட்ட விமர்சனங்கள் எழாமலிருப்பது விநோதமாக இருக்கிறது. எது எப்படியோ, 'நாடு பொருளாதார வளர்ச்சியில் வீறுகொண்டு எழுந்து நிற்கிறது' என கதைப்பவர்கள் இந்தப் படங்களைப் பார்த்து விட்டு முகத்தை எங்கு கொண்டு வைப்பார்கள்?

அதே நேரம் ஸ்லம் டாக் மில்லியனருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஸ்மைல் பிங்கி ஆவணப்படத்திற்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்பதும் உறுத்துகிறது. ஸ்லம் டாக் மில்லியனருக்கான ஆர்ப்பாட்டங்களிலும், கொண்டாட்டங்களிலும் இந்த மிக முக்கியமான நிகழ்வு பலருடைய கவனத்துக்கே வராமல் கரைந்து போயிருக்கிறது. நமது தேசத்திலிருந்து ஒரு ஆவணப்படமும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்குபெறுகிறது என்பது முக்கியமான செய்தியாக முன்வரவில்லை. கிழிந்து போன இந்த ஊடகங்களின் உதடுகளை எந்த ஆபரேஷன் மூலம் சரி செய்வது?

இவளது தேசம் பேசாவிட்டாலும், இவளது ஊரே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. "இவள் ஒரு தனலட்சுமி, பரிசோடுதான் வருவாள்" என்கிறார்கள் ஊர்மக்கள். இவளது தந்தையும் ஆஸ்கர் பரிசு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார். தாய் ஷிம்லாதேவிக்கு அந்த நினைப்பெல்லாம் இல்லை. தன் குழந்தையின் முகத்தில் இந்த புன்னகை எப்போதும் இருக்க வேண்டும் என்று மட்டுமே வேண்டிக்கொண்டு இருக்கிறார்.

இந்திய இயக்குனர்களால் எடுக்கப்படும் படங்கள் எப்போது இதுபோன்ற பரிசுகள் பெறும் என நாம் வேண்டிக்கொண்டு இருக்கிறோம்.



பி.கு:

1.இந்த வருட ஜனவரி இறுதியில் பிங்கிக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. படுக்கையை விட்டு எழுந்திரிக்க முடியவில்லை. டாக்டரை அழைத்தால் பணம் கேட்பார் என்று பேசாமல் இருந்திருக்கிறது அவளது குடும்பம்.

2.இந்தப் படத்தின் டிரெய்லரை இங்கே பார்க்கலாம்.

Tuesday, February 17, 2009

காதலர் தின ஸ்பெஷல்:அவிச்ச முட்டை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:ஒரு முட்டை + இரண்டு அலைபேசிகள்

கீழே உள்ள படத்தில் காட்டியது போல ஒரு இணைப்பு உருவாக்கவும்




இரண்டு அலைபேசிகளுக்கிடையே தொடர்பு ஏற்படுத்தி 65 நிமிடங்கள் வைக்கவும்.

முதல் 15 நிமிடங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.

25 நிமிடங்களுக்கும் பிறகு முட்டையில் சூடேற ஆரம்பிக்கும்

45 நிமிடங்களுக்கு பிறகு முட்டை நன்றாக சூடாகிவிடும்


65நிமிடங்களுக்கு பிறகு முட்டையை உடைத்துப்பார்க்கவும்.

அது நன்கு வேகவைக்கப்பட்ட முட்டையாக மாறிவிடும்.




முடிவு: அலைபேசிகளின் மூலம் ஏற்படும் கதிர்கள் முட்டையிலுள்ள புரதச்சத்தை மாற்றும் தன்மையுடையது. நீண்ட நேரம் அலைபேசியில் பேசுபவர்களின் மூளையிலுள்ள புரதச்சத்து என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்

தயவு செய்து நீண்ட நேரம் அலைபேசியில் பேசுவதை தவிர்க்கவும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவிக்கவும்.

"மூளை இல்லாத காதலர்கள் இது பத்தி கவலைப்பட தேவையில்லை"

பின் குறிப்பு: ஆங்கிலத்தில் எனக்கு வந்த இந்த செய்தியில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று எனக்கு தெரியாது இருந்தாலும் அலைபேசிகளை அதிகம் பயன் படுத்துவதில் கண்டிப்பாக ஆபத்து இருக்கிறது. மேல் விவரங்களுக்கு நண்பர் சாதிக் அலியின் கீழுள்ள பதிவை பார்க்கவும்.
http://sathik-ali.blogspot.com/2009/02/blog-post_1570.html.

Wednesday, February 11, 2009

இன்று குவைத்தில் புழுதிமூட்டம்

இன்று காலையில்


பத்து மணிக்கு



பதினொன்றரைக்கு


12.45ல்



தொடர்ந்து சாலைகள் தெரியாத அளவுக்கு தூசி மூடிக்கொண்டே வருகிறது.

Sunday, October 19, 2008

“எனது விசா முடிய இன்னும் பதினைந்து நாட்களே உள்ளது”

புதிய வேலைக்கும் சேர்வதற்கு முன்பு வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பகல் நேரத்தை நான் அனுபவித்துக்கொண்டிருந்தபொழுது தான் என் தொலைபேசி மணி அடிக்க ஆரம்பித்தது. ஒரு பெண் குரல் “இந்த செய்தியை சொல்வதற்கு வருந்துகிறேன் நீங்கள் வரும் புதன்கிழமை உங்கள் புதியவேலைக்கு சேரவேண்டிய அவசியம் இல்லை. தற்போதைய நிலையில் எங்களுக்கு இதை தவிர வேறு வழியில்லை. உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.” அடுத்த முனையில் தொலைபேசி வைக்கப்படும் சத்தம் கேட்டது. எனது எச்1பி விசா முடிய இன்னும் முப்பத்தி ஆறு நாட்களே உள்ள நிலையில் இந்த அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டிருக்க கூடாது ஆனால் என்ன செய்ய. என் மதிய உணவு தீண்டப்படாமல் ஆறி அவலாக மாற ஆரம்பித்திருந்தது.
செப்டம்பர் மாதம். என்னை சுற்றியுள்ளவர்களை போலவே நானும் கையிருப்பு குறைவதையும் நாட்கள் வேகமாக நகர்வதையும் தாள முடியாமல் இருந்தேன். வேலைக்கு எடுக்கும் பல இந்திய நிறுவனங்களை தொடர்புக்கொள்ள ஆரம்பித்தேன். பலரும் இந்தியாவுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் என அவர்கள் சொன்னதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தியாவில் புதிதாக மிகவும் திறமையான பலர் வேலைக்காக தயார் நிலையில் இருப்பதாக தெரிந்தது.
இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்னும் பதினைந்து நாட்களுக்கு மட்டுமே எனக்கு விசா இருக்கிறது. முதன் முதலாக நேவார்க் விமான நிலையத்தில் நான் இறங்கிய 2005ம் வருடம் ஜூலை எட்டாம் தேதி அடிக்கடி நினைவுக்கு வருகிறது. பதட்டமும் மகிழ்ச்சியும் கலந்த தினம் அது. ஒரு பிரபலமான நிதி நிறுவனத்தின் ஆலோசகர் பணியில் சேர்வதற்காக வந்திருந்தேன்.
ஒவ்வொரு நாளும் கொடுக்கப்பட்ட நேரத்திற்கு மேல் கடுமையாக உழைத்து நிர்வாகம் எதிர்ப்பார்த்ததற்கும் மேலான பலனை அவர்களுக்கு அளித்தேன். தொடர்ந்து உச்சநிலையில் இருந்தேன். மேலும் மேலும் கடுமையாக உழைத்தேன். எப்படியும் எனது எம்பிஏ பட்டப்படிப்பு மூலம் இன்னும் மேல்நிலைக்கு செல்லவேண்டும் என்பதே என் ஆசை.
மிக சில நாட்களிலேயே என்னை அனுப்பிய இந்திய நிறுவனத்திற்கும் எனக்குமான உறவில் (பொதுவாக எல்லா நிறுவனங்களிலும் ஏற்படும் விரிசல் ) ஏற்பட நான் அந்த நிறுவனத்தை விட்டு விலகினேன். என்னை நேரடியாக அந்த அமெரிக்க நிதி நிறுவனமே வேலைக்கு எடுத்துக்கொண்டது. மன்ஹாட்டனில் உள்ள ஸ்வாங்கிற்கு ஜாகை மாறினேன். ஆரம்பத்தில் சில நாட்கள் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. கொஞ்ச நாட்களிலேயே மோசமான செய்தி ஒன்று தெரியவந்தது. ஆரம்பத்தில் அலுவலகத்தில் சிலரால் மட்டும் கிசுகிசுப்பாக பேசப்பட்ட அந்த செய்தி சில நாட்களில் எல்லோராலும் பேசப்பட்டது. ஆம். எங்கள் நிறுவனம் 2008 மார்ச் மாதம் விற்கப்பட்டது. பலர் வேலை இழந்தனர். என்னை போல ஒருசிலருக்கு மட்டுமே வேலை இருந்தது. எனது நெருங்கிய நண்பர் வேலை போனதால் இந்தியாவுக்கு திரும்பிவிட்டார்.
நானும் உடனடியாக ஏதேனும் செய்யவேண்டும் என முடிவு செய்தேன். பல வணிகத்துறை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு மேற்படிப்புக்காக விண்ணப்பித்தேன். அதே நேரத்தில் வால் ஸ்ட்ரீட்டின் மிக பெரிய நிதி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக நஸ்டத்தினால் மூடப்பட்டுக்கொண்டிருந்தது. பிட்ஸ்பர்க்கில் உள்ள ஒரு கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்ததால் அங்கு இடம் மாறினேன்.
இங்கு வந்த இரண்டு வாரங்களில் நான் எடுத்த முடிவு தவறு என்பதை உணர்ந்தேன். மிகவும் தகுதி வாய்ந்த, படிப்பும் பட்டமும் திறமையும் பெற்ற உலகின் பெரும் நிதி நிறுவனங்களில் பணியாற்றிய பலர் வேலைக்காக அலைந்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் வணிகத்துறையில் ஒரு உயர்படிப்பு பட்டம் எனக்கு எந்த விதத்திலும் உதவாது என்பதை புரிந்துக்கொண்டேன். மீண்டும் நியூயார்க்குக்கு திரும்பினேன். என் குடும்பத்தினருக்கு மிகவும் அதிர்ச்சி. எப்படியோ சமாளித்து மிகவும் முயற்சித்து கடைசியில் சிறிய ஒரு நிதி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வரும் புதன் கிழமை அதில் சேரவேண்டும். அந்த நேரத்தில் தான் போன் மணி ஒலித்தது.

நன்றி: சந்தீப் கே. (நியூயார்க்) - இந்துஸ்தான் டைம்ஸ் (தமிழில் மொழிப்பெயர்த்தது: மஞ்சூர்ராசா)

Friday, September 05, 2008