Tuesday, September 27, 2005

ஒரு நம்பிக்கை துரோகம்

ஓரு நம்பிக்கை துரோகம்
முதலில் அவனை வெளியே இழு!
அவனது வீட்டை
அடிக்கல்லிலிருந்து தோண்டி எடுத்து
ஒரு ஓரத்தில் கட்டிலைப்போல சாய்வாய் நிறுத்தி வை!
பிறகு அவனை தூக்கிமூடிய கதவுக்கு மேலே இருத்து!
அவன் நிலை தடுமாறுவான்.

அவன் கைகளை பின்னால் கட்டி
கண்களை ஒரு வண்ணப்பொய்யினால் மூடு!
எது செய்தாலும் அவனிடம்
எந்தவித அசைவுகளும் இருக்காது

இவை அனைத்தும் தன் நன்மைக்கே
எனக்க்கூட அவன் ஒரு கணம் எண்ணக்கூடும்!

இப்போது அவன் வீட்டுக் கிணற்றிலிருந்து
கயிறை எடுத்து சுருக்குப் போட்டு
அவன் கழுத்தில் மாலையாய் போடு!
அவன் ஒன்றும் செய்யமாட்டான்!

பூஜையறைக்கிண்டியைப் போல
அசைவேதும் இருக்காது அவனிடம்

கயிற்றின் மறுமுனையை
அவன் வீட்டின்முன் இருக்கும்
பழைய மரத்தில் கட்டு!

அவன் உன்னை வணங்குவான்.

இப்போது கேள், அவனுக்கு என்ன வேண்டுமென்று!

தனது வீட்டில் அமைதியாக
வாழவேண்டுமென்று அவன் சொன்னால்
மெதுவாக எழுந்து அவனுக்காக
அவன் வீட்டுக் கதவைத் திறந்துவிடு!

அவன் வேதனையில் துடிப்பான்
ஆனால் துடிப்பில் விண்ணப்பமிருக்காது
அவன் மிக விரைவில் இறந்து விடுவான்
பிறகு அவனுக்கும் உனக்கும்
எந்த வித்தியாசமும் இருக்காது


இந்தியில் : குன்வர் நாராயண்

0 comments: