Tuesday, September 27, 2005

மொழியை தொலைத்துவிட்டேன்

மொழியை தொலைத்துவிட்டேன் என்று
எந்த அர்த்தத்தில் சொன்னாயென
என்னை நீ கேட்டாய்

நான் கேட்டேன்,
உன்னிடம் இரண்டு மொழிகள் இருந்து
அதில் தாய்மொழியை தொலைத்துவிட்டு,
மற்றொன்றையும் சரியாக அறியாமல் இருந்தால்
என்ன செய்வாய் என்று.

நீ நினைத்தாலும் கூட
உன்னால் இரண்டு மொழிகளையும்
ஒரே நேரத்தில் பேச முடியாது

நீ வசிக்கும் இடத்தில்
அயல் மொழிதான் பேசவேண்டும் எனும்போது
நீ உமிழவில்லையெனில்
உன் தாய்மொழி அழுகி அழுகி
உன் வாய்க்குள்ளேயே மரித்துவிடும்

அதைத் உமிழ்ந்துவிட்டேன்
என்றே நான் நினைத்தேன்
நேற்றைய என் கனவில்
அது மீண்டும் வரும் வரை.

திரும்பவும் வளர்ந்து வந்தது,
அதன் கிளைகள் நீண்டு வளர்ந்தன,
ஈரத்துடனும், முறுக்கிய நரம்புகளுடனும்
அது மேலும் மேலும் வளர்ந்தது
அது அயல் மொழியை இறுக்கமாக கட்டியது.
மொட்டு மலர்ந்தது,
மொட்டு மலர்ந்தது எனது வாயிலிருந்து
அது அயல் மொழியை ஓரமாக தள்ளியது
ஒவ்வொரு முறையும் தாய் மொழியை
மறந்துவிட்டேனோ என்ற நினைப்பும்,
தொலைந்து போனதோ
என்ற எண்ணமும் வருகையில்.
என் வாயிலிருந்து மீண்டும் மலர்கிறது

0 comments: