Tuesday, September 27, 2005

அமைதி விற்கும் அங்காடி

அமைதியை விற்கிறான் என் அண்டைவீட்டுக்காரன்.
அவனுடைய ஒலிப்பெருக்கிக் கடை
என் பக்கத்து வீடு

சூரியன் உதிப்பதற்கு இரண்டுமணி நேரத்திற்குமுன் ஒலிப்பெருக்கியை இயக்காமலிருக்க அவனுக்கு நான் மாதம் நூறு ரூபாய் கொடுக்கிறேன்.

அவனுக்குத் தெரியும் அமைதியின்றி வாழமுடியாத என்னைப் போன்ற பல துரதிர்ஸ்டசாலிகளை
அவனுக்குத் தெரியும் இனி வரும் நாட்களில் நல்ல குடிதண்ணீருக்கும், மாசில்லாதக் காற்றுக்கும் ஏற்படும் பற்றாக்குறையைவிட அமைதிக்கு அதிகப் பற்றாக்குறை ஏற்படுமென்று

காலத்தின் சுழற்சிகள் முடிந்துவிட்டன என்றும் இனி வரும் நாட்களில் அமைதியை விற்று தான் வாழ்க்கை நடத்தவேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும்

இந்தியாவைப் போனற விலைவாசி ஆகாயத்தை எட்டிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் மாதம் வெறும் நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு இரண்டு மணி நேரம் அமைதியைத் தரும் அவனுக்கு நான் நன்றி சொல்கிறேன்.

0 comments: