Friday, November 09, 2007

எச்சரிக்கை - அவசரம்

எச்சரிக்கை

அன்பு நண்பர்களே

முத்தமிழ் குழுமத்தின் இணைய சொல்லி அழைப்பு வருவதாக ஒரு சில நண்பர்கள் தகவல் அனுப்பியிருக்கின்றனர். முத்தமிழ் கூகிள் குழுமத்தில் உறுப்பினராக சேர யாருக்கும் தனியாக அழைப்பு அனுப்பப்படுவதில்லை. ஆகவே உங்களுக்கும் முத்தமிழ் பெயரில் குழுமத்தில் இணைய சொல்லி அழைப்பு வந்தால் அந்த மடலை உடனடியாக நீக்கிவிடுங்கள்.அந்த அழைப்பின் மூலம் உங்கள் கடவுச்சொல் திருடப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது மட்டுமல்ல வேறு எந்த முகவரியிலிருந்து இணைய சொல்லி அழைப்பு வந்தாலும் அதை திறக்க வேண்டாம். உங்கள் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கேட்கும் எந்த இணைப்பையும் திறக்கவேண்டாம். பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுக்கவும் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

முத்தமிழில் இணைய விருப்பமுள்ளவர்கள் குழும முகவரிக்கு நேரடியாக விண்ணப்பித்து சேர்ந்து கொள்ள முடியும். குழுமம் உங்களின் கடவுச்சொல்லை கேட்பதில்லை.

முத்தமிழ் குழுமத்தின் மீதான இந்த தாக்குதல் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ செயல்படும் ஒரு சில விஷமிகளின் வேலையே. விரைவில் அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவார்கள் என்பதையும் சரியான தண்டனைக்கு ஆளாவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

4 comments:

said...

நல்ல தகவலை தெரிவித்து இருக்கிறீர்கள் மஞ்சூர் ராசா.

அன்புடன் ஜோதிபாரதி
http://jothibharathi.blogspot.com

said...

அய்யையோ நாங்க என்ன பாவம் பண்ணினோம் , எங்களுக்கு கூட வந்திச்சி...

ஒன்னுமே புரியல, நீங்க தான் அழைப்பு அனுப்பினீர்களா இல்ல வேற யாரவதா

இது நடந்து 2 வாரம் ஆச்சி...

said...

இப்ப என்ன பண்ணுவது பிளிஸ் அட்வைஸ்...

இம்சை உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...

said...

பவன் ஒன்றும் புரியவில்லை.
எனக்கு தனி மடல் அனுப்பவும்.