Tuesday, June 21, 2005

வாடி வாசல்

வாடிவாசல் - சி.சு. செல்லப்பா எழுதிய குறுநாவல்.

இந்த குறுநாவலை நம்மில் பலர் படித்திருக்கலாம். ஆனாலும் ஒவ்வொருமுறை படிக்கும் பொழுதும் ஒரு புது உணர்வு ஏற்படுகிறது என்பது நிஜம்.

இந்த நாவலின் மையக்கருத்து ஜல்லிக்கட்டுப் பற்றியது. மாடு அணைவதை இவ்வளவு, விவரமாகவும், விறுவிறுப்பாகவும், அழகாகவும் யாராவது இதுவரை கையாண்டிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு ஒருநாள் கிரிக்கெட் மாட்ச் (வேண்டாம்) ஒரு கால்பந்தாட்ட பைனலை பார்ப்பது போன்ற உணர்வுடன் நம்மைக் கொண்டு செல்கிறது.

வட்டார வழக்கில், அடுத்து என்ன நடக்கும் என நம்மை எதிர்ப்பார்க்க வைத்து இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் லாவகத்திற்காக ஒரு சபாஷ்

மாடு அணைவது ஐந்தறிவு மிருகத்திற்கும், மனிதனுக்கும் நடக்கும் நேரடி யுத்தம் இதில் யார் ஜெயிப்பார்கள் என்பதை விட அந்த நேரத்தில் ஏற்படும் மனபோராட்டங்கள் மிக முக்கியமானவை.

இடையிடேயே அந்த காலத்தில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெரிய மனிதர்களுக்குமுன் எவ்வளவு பணிந்து நடக்க வேண்டும் என்பதையும் மிக நுணுக்கமாக எடுத்து சொல்கிறது.

ஜல்லிக்கட்டைப் பற்றி நமக்கு ஏற்படும் பல சந்தேகங்களை எளிய தமிழில் விளக்குகிறது.

40 வருடங்களுக்கு முன் வந்த இந்த நாவல் இன்னும் அழியாபுகழோடு இருப்பதற்கு காரணம் அதன் எளிய தமிழ் நடை மற்றும் களம்.

2 comments:

said...

I read this kurunovel in India Today Annual issue. As you said it is one of the best kurunovels in Tamil

said...

சுந்தர்,
நேரமிருப்பின் இன்னும் கொஞ்சம் விரிவாக அலசலாமே.
படிக்க சுவையாக இருக்கும்.