Monday, June 20, 2005

மூன்றரை வருட அவஸ்தை

நேற்று பயங்கர வெயிலில் ஒரு முக்கியமான வேலையாக அலைந்துவிட்டு(காரில்தான்) (வெயில் மட்டுமல்ல, சூடான மணல் தூசியும் சுமார் 55 டிகிரிஇருக்கலாம்). மனைவியையும் அவங்க அலுவலகத்திலிருந்து பிக்கப் செய்துக்கொண்டு, இனி எங்கே வீட்டுக்கு போய் சமையல் செய்து சாப்பிடமுடியும் (2 மணி) என்று ஓட்டலில் சாப்ப்ட்டுவிட்டு கிளம்பும் போது,

மனைவி: நீங்க போங்க, நா இங்கே இருக்கற தோழியைப் பார்த்துவிட்டு(தோழியிடமிருந்து இரண்டு முறை தொல்லைப்பேசி வந்துவிட்டது) அப்படியே உங்க தம்பி வீட்டுக்கு போய் மெட்டி ஒலி பார்த்துட்டு வந்து விடுகிறேன். நம்ம வீட்லெ வர்றதில்லெ
மறுத்துப் பேச முடியுமா நான். சரி, சீக்கிரம் வந்துரு.

தோழியின் வீட்டில் மனைவியை இறக்கிவிட்டு, வீட்டிற்கு வந்து அப்பாடா கொஞ்ச நேரம் படுக்கலாமேன்னு கண்ணெ மூடி ஒரு அஞ்சி நிமிசம் இருக்கும்,
வீட்டு தொல்லைபேசி கிணுகிணுத்தது
ஹலோ, அண்ணா, நா சந்திரசெகரண்ணா,
ஒரு முக்கியமான விசய்மண்ணா,
நீங்க வீட்லெதானெ இருக்கீங்க
ஆமா என்ன விசயம்?
இல்லெண்ணா நா நேரில் வந்து பேசறேன்!
சரி வா.
பேசியை வைத்துவிட்டு மறுபடியும் படுத்தேன்.
லேசாக கண்ணயர்ந்து பத்துநிமிடம் கழித்து மறுபடியும் தொல்லைபேசி
அண்ணா நாந்தான் சந்திரசேகர்,
அண்ணா உங்க வீட்டிலெ மெட்டி ஒலி வருதா அண்ணா?
இல்லெ
அப்படியா, அக்கா எங்கே?
தம்பி வீட்டுக்கு போயிருக்கா, ஆமா நீ ஏதோ விசயம் பேச வர்றேன்னுசொன்னியே?
அது ஒண்ணுமில்லெண்ணா, மெட்டிஒலி பாக்கணும்னுதான்!
பேசி வைக்கப்பட்டது.
(என்னுடைய நிலைமெ எப்படி இருக்கும்)

மறுபடியும் 10 நிமிடம் கழித்து,
கதவு தட்டும் சத்தம்.
எரிச்சலுடன் தூக்கக்கலக்கத்தில் கதவைத் திறந்தால்,
வீட்டுகாரியும், தோழியும்.
அவங்க வீட்லெ வரலீங்க, நம்ம வீட்லெவர்தா?
டிவியை ஆன் செய்தாள்.
என் துரதிர்ஸ்டம் இரண்டுநாள் வராத சன் டிவி வந்தேவிட்டது.
என்ன செய்ய, ஹாலை விட்டு பேசாமல் உள்ளே போய் படுத்தேன். தூக்கம்வந்தால்தானே!?
கொடுமை...

கொஞ்ச நேரம் புரண்டு புரண்டுப் படுத்துவிட்டு, முடியாமல் எழுந்து முகம் கழுவிவிட்டு, மனைவியிடம் டீ போட சொன்னா கோவிச்சுக்குவாளெ என்று
நைசா, என்ன ஆச்சு என்றுக் கேட்டால்,
க்ளைமாக்ஸ் சரியில்லெ என்றாள்.
பிறகு ஒரு வழியா அவளே எழுந்து டீ போட்டுக் கொடுத்துவிட்டாள்
பின்குறிப்பு: மெட்டி ஒலி முடிந்த கையோடு புது தொடர் ஆரம்பிக்கிறார்களாம் (செத்தோமடா சாமி)
இதுக்கு வைரமுத்து, கலைஞர், மனோரமா இவர்களின் தலைமையில் விழாவேறெ!.

ஐய்யயோ என்ன ஒரே கூட்டமா வருது....
கையில் என்னன்னமோ இருக்குதே,?
அட நம்மளெத்தான் மொத்த வர்றாங்க டோய்!..
விடு ஜூட்.....

1 comments:

Anonymous said...

super! Eppadi puttu puttu vaikireenga